Justice
30 Kurals on Justice.
“Being fair means treating friends, strangers, and people you dislike with equal care. This goodness matters when you practice it with everyone.”
அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.
“Wealth built through fairness lasts and gives security to future generations.”
நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.
“Give up any gain that comes from unfair treatment right away. Do this even if it seems to bring only good.”
தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நிலைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.
“Whether someone lived with integrity or abandoned fairness becomes clear through what they leave behind — the lasting reputation, the praise or blame that endures after them.”
நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.
“Loss and gain are inevitable parts of life. The true mark of wisdom is maintaining inner balance and steadiness through both prosperity and adversity.”
கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.
“When you start thinking of acting unfairly, take it as a warning. You are heading toward trouble in your own life.”
தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.
“People respect someone who stays fair and does what is right. Having little money does not make that person worth less.”
நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.
“Wise people judge fairly, like a balance scale that weighs things evenly. They do not lean toward one side out of personal preference.”
முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.
“Truly fair words come from a mind that does not take sides. Fairness means keeping both your thoughts and your words fair.”
உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.
“Good business means caring for other people's goods as your own. Deal honestly with what others trust you to handle.”
பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல வாணிக முறையாகும்.
“Find out what went wrong without taking anyone’s side. Then carefully decide what action is fair, whoever is involved.”
யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.
“Just as the world depends on rain from the sky, a people depend on the just rule of their leaders. Fairness is the climate everything else grows in.”
உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.
“A ruler's just governance forms the foundation that allows spiritual learning and ethical practice to flourish in society. Without the stability and fairness provided by righteous authority, neither wisdom nor virtue can truly take root.”
அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.
“People stand by a ruler who treats them with care and fairness. Such a ruler earns respect far beyond their own land.”
குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும்.
“Fair rule helps a country thrive, like timely rain helping crops grow. Good government supports a better life for its people.”
நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.
“A ruler's success comes from fair rule, not from weapons. That rule must stay fair and help people live well.”
ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.
“A ruler protects the people under their care. If the ruler stays fair, that fairness protects the ruler too.”
உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.
“A ruler must be easy to approach, examine complaints, and act fairly. Without this, the ruler can fall even without an enemy.”
எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதி முறை செய்யாத அரசன், தாழ்ந்த நிலையில் நின்று (பகைவரில்லாமலும் ) தானே கெடுவான்.
“A ruler must protect people from harm, including harm from the ruler. Giving suitable punishment for crimes is a duty, not a disgrace.”
குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில் பழி அன்று.
“The couplet compares a ruler's death penalty for cruel crimes to pulling weeds. The purpose is to protect people, just as weeding protects crops.”
கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்.
“A ruler who keeps hurting people and treating them unfairly is crueler than someone who lives by killing.”
குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்.
“A ruler who uses power to demand people's money acts like an armed robber. What sounds like a request becomes a threat.”
ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது.
“A ruler must check for problems and act fairly every day. Without this care, the country gets worse day by day.”
நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான்.
“A government that acts harshly without thinking loses money and people's respect. Unfair rule harms both at the same time.”
(ஆட்சிமுறை கெட்டுக்) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான்.
“When a ruler's cruelty becomes unbearable, people cry in pain. Their suffering can wear away the ruler's wealth and power.”
(முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ.
“Rulers earn lasting respect by treating people fairly. Without fair rule, their good name will not last.”
அரசர்க்கு புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும், அஃது இல்லையானால் அரசர்க்கு புகழ் நிலைபெறாமல் போகும்.
“People suffer under a ruler without kindness, just as the world suffers without rain.”
மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ, அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி.
“Under an unfair ruler, having wealth can hurt more than being poor.”
முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப் பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும்.
“The couplet warns that unfair rule brings failed rains. Its deeper explanation shows how ruined water storage wastes the rain that falls.”
அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.
“When rulers fail to protect people, work that supports life suffers. Important jobs and learning can fade as a result.”
நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.