All themes
Theme

Ethics

50 Kurals on Ethics.

Kural · 1
Ch 1 — The Praise of God
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

“As the letter A begins the alphabet, the eternal, foundational Source begins the world: everything that exists rests on a first principle.”

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

EthicsLearning
Kural · 2
Ch 1 — The Praise of God
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

“What is the use of all one's learning if one does not humbly acknowledge and honour those of greater wisdom and purity of understanding?”

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

EthicsLearning
Kural · 3
Ch 1 — The Praise of God
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

“Those who hold close to the sacred feet of the One who dwells in the flower of the heart will flourish with lasting joy in this world.”

அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்

EthicsLearning
Kural · 4
Ch 1 — The Praise of God
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

“God is free from likes and dislikes. Those who keep God close in their thoughts find freedom from suffering.”

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை

EthicsLearning
Kural · 5
Ch 1 — The Praise of God
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

“Those who truly understand and embrace the essence of the divine will not be bound by the dual forces of good and evil karma that arise from ignorance.”

கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை

EthicsLearning
Kural · 6
Ch 1 — The Praise of God
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

“Those who follow the truthful, disciplined path of the Divine—who has mastered the five senses—will live a life of enduring meaning and prosperity.”

ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்

EthicsLearning
Kural · 7
Ch 1 — The Praise of God
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

“Only those who anchor themselves to something incomparable — a truth larger than themselves — can free their minds from anxious worry.”

தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது

Self-ControlEthics
Kural · 8
Ch 1 — The Praise of God
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

“God is pictured as a sea of goodness. Without staying close to that goodness, life's struggles are hard to overcome.”

அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது

EthicsLearning
Kural · 9
Ch 1 — The Praise of God
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

“The verse asks us to bow before God, who has eight great qualities. A head that does not bow is like an eye that cannot see.”

கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்

EthicsLearning
Kural · 10
Ch 1 — The Praise of God
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

“Being born again and again is compared to a vast sea. The verse says only those who stay close to God can cross it.”

இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது

EthicsLearning
Kural · 21
Ch 3 — The Greatness of Ascetics
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

“The highest purpose of all good writings is to honor those who live with discipline and have let go of selfish desires.”

ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.

Self-ControlEthics
Kural · 22
Ch 3 — The Greatness of Ascetics
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

“The greatness of those who have let go of all attachments is impossible to measure. Trying to describe it is like trying to count every person who has ever died.”

பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.

Self-ControlEthics
Kural · 23
Ch 3 — The Greatness of Ascetics
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

“The greatness of those who understand what is truly good and what is harmful, and who choose to live by goodness, shines brightest in the world.”

பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது

Self-ControlEthics
Kural · 24
Ch 3 — The Greatness of Ascetics
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.

“A person who controls their five senses with the firm tool of self-discipline plants the seed for a higher, peaceful life.”

அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்

Self-ControlEthics
Kural · 25
Ch 3 — The Greatness of Ascetics
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.

“A person who controls their five senses (sight, sound, touch, taste, smell) gains extraordinary inner power. Even Indra, the king of heaven in ancient stories, shows us what happens when someone masters their desires.”

ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்

Self-ControlEthics
Kural · 26
Ch 3 — The Greatness of Ascetics
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

“Truly great people take on hard tasks and complete them. Small-minded people avoid difficult work.”

செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.

Self-ControlEthics
Kural · 27
Ch 3 — The Greatness of Ascetics
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

“The person who truly understands the five senses—taste, sight, touch, sound, and smell—and can control them is the one who truly understands and masters the world.”

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.

Self-ControlEthics
Kural · 28
Ch 3 — The Greatness of Ascetics
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

“The true greatness of wise people is shown by the lasting teachings they leave behind. Their words continue to guide the world long after they are gone.”

பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.

Self-ControlEthics
Kural · 29
Ch 3 — The Greatness of Ascetics
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

“When a truly good person becomes angry, even that brief flash of anger carries tremendous force that is hard to face or endure.”

நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.

Self-ControlEthics
Kural · 30
Ch 3 — The Greatness of Ascetics
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

“A truly virtuous person is one who treats every living being with genuine kindness and compassion. This quality of treating all life with warmth and respect is what makes someone truly noble.”

எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.

Self-ControlEthics
Kural · 31
Ch 4 — Assertion of the Strength of Virtue
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

“Living with integrity brings respect and prosperity. Nothing else in life gives you more real benefit than doing what is right.”

அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?

Ethics
Kural · 32
Ch 4 — Assertion of the Strength of Virtue
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

“Nothing brings more good to your life than living by virtue. Nothing causes more harm than forgetting or ignoring virtue.”

ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.

Ethics
Kural · 33
Ch 4 — Assertion of the Strength of Virtue
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

“Do good wherever and however you can, unceasingly — every place and moment is an opportunity for virtue.”

செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.

EthicsCompassion
Kural · 34
Ch 4 — Assertion of the Strength of Virtue
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.

“True goodness means keeping your mind free from harmful thoughts and intentions. Everything else people call virtue is just empty show.”

ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.

Ethics
Kural · 35
Ch 4 — Assertion of the Strength of Virtue
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

“True virtue means living without envy, greed, anger, and hurtful words. When you avoid these four, you walk a good path.”

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.

Ethics
Kural · 36
Ch 4 — Assertion of the Strength of Virtue
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

“Do not put off good actions for later. Start living with virtue today. When your body dies, the goodness you did will remain as your lasting companion.”

இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.

Ethics
Kural · 37
Ch 4 — Assertion of the Strength of Virtue
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

“You do not need to explain virtue's rewards in words. Just look at the person carried in comfort and the person carrying the heavy load.”

பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.

Ethics
Kural · 38
Ch 4 — Assertion of the Strength of Virtue
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.

“If you do something good every single day without wasting any day, those good acts become like a strong foundation stone that builds a better path for your entire life.”

ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.

Ethics
Kural · 39
Ch 4 — Assertion of the Strength of Virtue
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.

“True happiness comes only from living with virtue and doing what is right. Everything else may look like pleasure, but it brings no real joy and no lasting honor.”

அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.

Ethics
Kural · 40
Ch 4 — Assertion of the Strength of Virtue
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.

“Whatever you work hard to do in life should be good and right. Whatever you must avoid and protect yourself from is wrongdoing and disgrace.”

ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.

Ethics
Kural · 41
Ch 5 — Domestic Life
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

“A true householder is one who genuinely supports the three groups who depend on them — elders, family, and guests.”

இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.

FamilyEthics
Kural · 42
Ch 5 — Domestic Life
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.

“People who run a home should support those who have left household life and those in need. They should also help care for those who have died.”

துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.

FamilyEthics
Kural · 43
Ch 5 — Domestic Life
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

“The chief (duty of the householder) is to preserve the five-fold rule (of conduct) towards the manes, the Gods, his guests, his relations and himself”

தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.

FamilyEthics
Kural · 44
Ch 5 — Domestic Life
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

“Earn money without doing wrong, and share what you have. This keeps family life on a good path for generations.”

பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.

FamilyEthics
Kural · 45
Ch 5 — Domestic Life
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

“When a home is built on love and doing what is right, that love and goodness become both the beauty of the home and its greatest reward.”

இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

FamilyEthics
Kural · 46
Ch 5 — Domestic Life
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்?

“If you live a good, honest family life with kindness and responsibility, you already gain everything that matters. There is no need to leave home and go somewhere else to find goodness.”

ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?

FamilyEthics
Kural · 47
Ch 5 — Domestic Life
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.

“A person who lives married life in the right way, following its natural duties and values, stands first among all people trying to live a good life.”

அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்.

FamilyEthics
Kural · 48
Ch 5 — Domestic Life
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.

“A family life that stays true to what is right and also helps others walk the same path is more valuable than a life spent alone in strict spiritual discipline.”

மற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும்அறம் தவறாத இல்வாழ்க்கை , தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்.

FamilyEthics
Kural · 49
Ch 5 — Domestic Life
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

“Family life, when lived with honor and care, is called true virtue. Even other ways of living are good if they bring no shame or harm to others.”

அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.

FamilyEthics
Kural · 50
Ch 5 — Domestic Life
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

“A person who lives a good family life, following what is right and caring for others, earns respect like the highest beings we honor.”

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.

FamilyEthics
Kural · 101
Ch 11 — Gratitude
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

“When someone helps you without your having done anything for them first, even offering them all of heaven and earth would not be adequate repayment for such unsolicited kindness.”

தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

Ethics
Kural · 102
Ch 11 — Gratitude
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

“A favor given at the right moment, no matter how small it appears, is worth more than the entire world when you truly understand what it meant.”

உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.

Ethics
Kural · 103
Ch 11 — Gratitude
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.

“Help given with love, without expecting anything back, has great value. Its goodness is greater than the sea.”

இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும் .

Ethics
Kural · 104
Ch 11 — Gratitude
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

“Even a tiny act of help can have great value. Those who understand its benefit value it far beyond its size.”

ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.

Ethics
Kural · 105
Ch 11 — Gratitude
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

“The value of help is not measured by its size. It depends on the character of the person receiving it.”

கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.

Ethics
Kural · 106
Ch 11 — Gratitude
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

“Remember your friendships with good, honest people. Do not leave behind friends who supported you through hard times.”

குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது .

Ethics
Kural · 107
Ch 11 — Gratitude
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.

“Remember the kindness of those who helped you through hard times. Keep valuing their friendship, no matter how much time passes.”

தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.

Ethics
Kural · 108
Ch 11 — Gratitude
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

“Never forget the good someone has done for you. But if they wrong you, let go of that hurt immediately—don't carry it forward even for a moment.”

ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம்.

Ethics
Kural · 109
Ch 11 — Gratitude
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

“Even if someone who once helped you later causes you harm as grave as murder, remembering the single act of kindness they showed you will dissolve the hurt.”

முன் உதவி செய்தவர் பின்பு ‌கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.

Ethics
Kural · 110
Ch 11 — Gratitude
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

“A person who violates every moral principle may still find redemption, but one who forgets or betrays a kindness done to them faces a wound no atonement can heal.”

எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.

Ethics
Thirukkural Wisdom

Ancient Tamil wisdom — made simple, practical and useful for the modern world, in your own language.

Disclaimer

This application provides educational explanations of the Thirukkural. English meanings and AI-assisted explanations are intended to make the text easier to understand. Classical texts can have multiple valid interpretations.

Thirukkural Wisdom for the World·Timeless Tamil couplets for global minds·© 2026
Choose your language
Tamil & English are always shown · pick a third language

Every Kural is presented in Tamil and English by default. If you'd like a third language alongside, choose one below. You can change or remove it anytime.

You can change this anytime from the globe button in the header.