Compassion
50 Kurals on Compassion.
“Rain keeps the entire world alive and thriving. Because of this, rain itself should be recognized as the true nectar of life.”
மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்
“Rain helps grow the food we eat and is itself something we drink and use. It serves us in two ways at once.”
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்
“If the rain clouds fail and do not bring water, hunger will spread everywhere and trouble everyone, even though we live on a planet surrounded by oceans.”
மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்
“When rain fails, farming stops. Without water from the sky, even the hardest-working farmer cannot plow the land.”
மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்
“Rain has the power to destroy life when it does not come, and the same rain can restore and rebuild what was lost when it returns.”
பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்
“Without rain from the sky, even the simplest green grass cannot grow. Rain is the foundation of all life on earth.”
வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது
“Even the vast ocean will lose its fullness if clouds take water from it but never return rain. Nature works in cycles—what you take, you must give back.”
மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்
“When rain fails, people cannot celebrate festivals or offer daily prayers to the gods, because there is no harvest to sustain worship.”
மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது
“If rain does not fall, people cannot give to others or follow their own spiritual practices. Both charity and devotion depend on rain.”
மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.
“Without water, no one can live their daily life. Without rain, there is no water, so all good behavior and orderly living fall apart.”
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்
“Do good wherever and however you can, unceasingly — every place and moment is an opportunity for virtue.”
செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.
“Love cannot be hidden or locked away. Even a small tear reveals the love inside our hearts.”
அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்
“People without love keep everything for themselves. People with love share everything they have, even their own bodies, with others.”
அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்
“Love and action must be joined together, just as the soul and body are joined in a living person. When love guides what we do, that is when life becomes truly meaningful.”
அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.
“Love makes us care deeply about others. That caring grows into friendship, a priceless gift that cannot be measured.”
அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்
“The joy and respect that happy people enjoy in this world come from living with a loving heart.”
உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர்
“People who do not understand deeply think love only supports goodness. But love also gives strength to fight against wrongs and protect others.”
அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது
“If you know what is right but lack love, your own conscience will torment you. It is like harsh sunlight burning a soft, defenseless creature.”
எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.
“A life lived without love in the heart is like a dead tree trying to grow leaves in a desert. It may look alive on the outside, but it cannot truly flourish.”
அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.
“If a person has no love inside, what is the use of having a healthy body outside? Love is the heart's true organ.”
உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்.
“A life lived in love is genuinely alive; without love, the body is merely bones wrapped in skin.”
அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்
“The entire purpose of maintaining a household and accumulating resources is to enable the gracious welcome and care of guests who arrive at your door.”
வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்
“Eating alone while guests wait outside is unworthy, even if the food you're consuming could grant immortality itself.”
விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று
“The life of one who warmly welcomes and cares for guests every day will never fall into ruin or poverty. Genuine hospitality, practiced consistently, sustains rather than depletes a household.”
தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.
“Prosperity takes up permanent residence in the home of those who welcome guests with genuine warmth and a smiling face.”
நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.
“Does a person who honors guests first and only then eats what remains even need to sow seeds in their fields? The implication is that such selfless hospitality brings its own natural abundance and prosperity.”
விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?
“A person who warmly welcomes guests and eagerly waits for more visitors to arrive is truly noble. Such generosity makes them honored everywhere, even in the highest places.”
வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்
“The value of welcoming and caring for guests cannot be measured in fixed terms. The worth of your hospitality equals the quality and character of the guests you receive.”
விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்
“People who hoard wealth without sharing it with guests will one day lose everything and regret that they never used it for the true purpose of welcoming others.”
விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று இரங்குவர்
“A person who has money but refuses to welcome guests is truly poor. Only foolish people ignore hospitality.”
செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.
“A guest's spirit wilts when the host greets them with a cold face, just as the delicate anicham flower fades the moment you smell it.”
அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்.
“Truly pleasant words carry love and tell the truth. They come from real understanding, with no wish to trick anyone.”
அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.
“Speaking kindly with a warm, genuine smile is a greater gift than giving material things with generosity. The way we speak to others can touch them more deeply than what we give them.”
முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.
“True goodness means speaking kind words that come from your heart, while your face shows warmth and your eyes look at others with care.”
முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.
“People who speak kindly to everyone will never suffer the loneliness that comes from being friendless or unsupported.”
யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.
“True adornment for a person is humility and speaking kindly. Gold, jewels, or fancy clothes are not real ornaments.”
வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல.
“When you look for what is truly good and speak about it in kind, gentle words, the harm in you fades away and goodness grows stronger.”
பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.
“Words that help others and stay kind bring joy and goodness to the person who speaks them.”
பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.
“Kind words that do not hurt or belittle others bring happiness to the speaker in this life and leave a lasting good name after death.”
பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும் .
“Why would anyone who has witnessed the joy that kind words bring continue to use harsh, hurtful language?”
இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?
“Speaking harshly when kind words are available is like picking unripe fruit when ripe ones are within easy reach.”
இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது .
“True duty to society expects nothing in return. What recompense does the world offer to the clouds that generously pour rain upon it?”
இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை.
“The wealth you earn through hard work should help others. Its purpose is to support people who deserve that help.”
ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.
“It is hard to find anything as good as living to help others.”
பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.
“We truly live when we understand and act on our duty to help others. Without this care, we are alive but miss what makes life meaningful.”
ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.
“A wise person uses their wealth to help the community. Their wealth is like a full village pond that supplies everyone's water.”
ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது.
“Wealth in a caring person's hands can help everyone around them. It is like a tree full of ripe fruit in the town's center.”
ஒப்புராவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.
“Wealth in a generous person's hands helps others, like a healing tree. Every part of that tree can be used as medicine.”
ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடத்து செல்வம் சேர்ந்தால் அஃது எல்லா உறுப்புகளுக்கும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது.
“People who understand their duty to others keep helping, even when they have little money.”
ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.
“A generous person feels poor only when they cannot help others who need it. Their real poverty is losing the power to do good deeds.”
ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.