All themes
Theme

Self-Control

50 Kurals on Self-Control.

Kural · 7
Ch 1 — The Praise of God
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

“Only those who anchor themselves to something incomparable — a truth larger than themselves — can free their minds from anxious worry.”

தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது

Self-ControlEthics
Kural · 21
Ch 3 — The Greatness of Ascetics
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

“The end and aim of all treatise is to extol beyond all other excellence, the greatness of those who, while abiding in the rule of conduct peculiar to their state, have abandoned all desire”

ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.

Self-ControlEthics
Kural · 22
Ch 3 — The Greatness of Ascetics
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

“To describe the measure of the greatness of those who have forsaken the two-fold desires, is like counting the dead”

பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.

Self-ControlEthics
Kural · 23
Ch 3 — The Greatness of Ascetics
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

“The greatness of those who have discovered the properties of both states of being, and renounced the world, shines forth on earth (beyond all others)”

பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது

Self-ControlEthics
Kural · 24
Ch 3 — The Greatness of Ascetics
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.

“He who guides his five senses by the hook of wisdom will be a seed in the world of heaven”

அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்

Self-ControlEthics
Kural · 25
Ch 3 — The Greatness of Ascetics
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.

“Indra, the king of the inhabitants of the spacious heaven, is himself, a sufficient proof of the strength of him who has subdued his five senses”

ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்

Self-ControlEthics
Kural · 26
Ch 3 — The Greatness of Ascetics
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

“The great will do those things which is difficult to be done; but the mean cannot do them”

செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.

Self-ControlEthics
Kural · 27
Ch 3 — The Greatness of Ascetics
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

“The world is within the knowledge of him who knows the properties of taste, sight, touch, hearing and smell”

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.

Self-ControlEthics
Kural · 28
Ch 3 — The Greatness of Ascetics
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

“The hidden words of the men whose words are full of effect, will shew their greatness to the world”

பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.

Self-ControlEthics
Kural · 29
Ch 3 — The Greatness of Ascetics
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

“The anger of those who have ascended the mountain of goodness, though it continue but for a moment, cannot be resisted”

நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.

Self-ControlEthics
Kural · 30
Ch 3 — The Greatness of Ascetics
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

“The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness”

எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.

Self-ControlEthics
Kural · 121
Ch 13 — The Possession of Self-restraint
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

“Self-control will place (a man) among the Gods; the want of it will drive (him) into the thickest darkness (of hell)”

அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.

Self-Control
Kural · 122
Ch 13 — The Possession of Self-restraint
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.

“Let self-control be guarded as a treasure; there is no greater source of good for man than that”

அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் ‌காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.

Self-Control
Kural · 123
Ch 13 — The Possession of Self-restraint
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.

“Knowing that self-control is knowledge, if a man should control himself, in the prescribed course, such self-control will bring him distinction among the wise”

அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும்.

Self-Control
Kural · 124
Ch 13 — The Possession of Self-restraint
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.

“More lofty than a mountain will be the greatness of that man who without swerving from his domestic state, controls himself”

தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.

Self-Control
Kural · 125
Ch 13 — The Possession of Self-restraint
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

“Humility is good in all; but especially in the rich it is (the excellence of) higher riches”

பணிவுடையவராக ஒழுகுதல்பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்.

Self-Control
Kural · 126
Ch 13 — The Possession of Self-restraint
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.

“Should one throughout a single birth, like a tortoise keep in his five senses, the fruit of it will prove a safe-guard to him throughout the seven-fold births.”

ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.

Self-Control
Kural · 127
Ch 13 — The Possession of Self-restraint
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

“Whatever besides you leave unguarded, guard your tongue; otherwise errors of speech and the consequent misery will ensue”

காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.

Self-Control
Kural · 128
Ch 13 — The Possession of Self-restraint
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.

“If a man's speech be productive of a single evil, all the good by him will be turned into evil”

தீய ‌சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.

Self-Control
Kural · 129
Ch 13 — The Possession of Self-restraint
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

“The wound which has been burnt in by fire may heal, but a wound burnt in by the tongue will never heal”

தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.

Self-Control
Kural · 130
Ch 13 — The Possession of Self-restraint
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

“Virtue actively seeks out and comes to those who have learned self-control, cultivated knowledge, and guard themselves against anger. Righteousness waits along the path of those who master restraint.”

சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.

Self-Control
Kural · 131
Ch 14 — The Possession of Decorum
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

“Propriety of conduct leads to eminence, it should therefore be preserved more carefully than life”

ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.

EthicsSelf-Control
Kural · 132
Ch 14 — The Possession of Decorum
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.

“Let propriety of conduct be laboriously preserved and guarded; though one know and practise and excel in many virtues, that will be an eminent aid”

ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.

EthicsSelf-Control
Kural · 133
Ch 14 — The Possession of Decorum
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.

“Propriety of conduct is true greatness of birth, and impropriety will sink into a mean birth”

ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.

EthicsSelf-Control
Kural · 134
Ch 14 — The Possession of Decorum
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

“A Brahman though he should forget the Vedas may recover it by reading; but, if he fail in propriety of conduct even his high birth will be destroyed”

கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.

EthicsSelf-Control
Kural · 135
Ch 14 — The Possession of Decorum
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.

“Just as the envious man will be without wealth, so will the man of destitute of propriety of conduct be without greatness”

பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.

EthicsSelf-Control
Kural · 136
Ch 14 — The Possession of Decorum
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.

“Those firm in mind will not slacken in their observance of the proprieties of life, knowing, as they do, the misery that flows from the transgression from them”

ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.

EthicsSelf-Control
Kural · 137
Ch 14 — The Possession of Decorum
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.

“From propriety of conduct men obtain greatness; from impropriety comes insufferable disgrace”

ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.

EthicsSelf-Control
Kural · 138
Ch 14 — The Possession of Decorum
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.

“Propriety of conduct is the seed of virtue; impropriety will ever cause sorrow”

நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.

EthicsSelf-Control
Kural · 139
Ch 14 — The Possession of Decorum
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.

“Those who study propriety of conduct will not speak evil, even forgetfully”

தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.

EthicsSelf-Control
Kural · 140
Ch 14 — The Possession of Decorum
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்

“Those who know not how to act agreeably to the world, though they have learnt many things, are still ignorant”

உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.

EthicsSelf-Control
Kural · 141
Ch 15 — Not coveting another"s Wife
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.

“The folly of desiring her who is the property of another will not be found in those who know (the attributes of) virtue and (the rights of) property”

பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.

EthicsSelf-Control
Kural · 142
Ch 15 — Not coveting another"s Wife
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.

“Among all those who stand on the outside of virtue, there are no greater fools than those who stand outside their neighbour's door”

அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.

EthicsSelf-Control
Kural · 143
Ch 15 — Not coveting another"s Wife
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்து ஒழுகு வார்.

“Certainly they are no better than dead men who desire evil towards the wife of those who”

ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்.

EthicsSelf-Control
Kural · 144
Ch 15 — Not coveting another"s Wife
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.

“However great one may be, what does it avail if, without at all considering his guilt, he goes unto the wife of another ?”

தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?

EthicsSelf-Control
Kural · 145
Ch 15 — Not coveting another"s Wife
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.

“He who thinks lightly of going into the wife of another acquires guilt that will abide with him imperishably and for ever”

இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், ‌எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்

EthicsSelf-Control
Kural · 146
Ch 15 — Not coveting another"s Wife
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.

“Hatred, sin, fear, disgrace; these four will never leave him who goes in to his neighbour's wife”

பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.

EthicsSelf-Control
Kural · 147
Ch 15 — Not coveting another"s Wife
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.

“He who desires not the womanhood of her who should walk according to the will of another will be praised as a virtuous house-holder”

அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே

EthicsSelf-Control
Kural · 148
Ch 15 — Not coveting another"s Wife
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.

“That noble manliness which looks not at the wife of another is the virtue and dignity of the great”

பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத ‌பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்.

EthicsSelf-Control
Kural · 149
Ch 15 — Not coveting another"s Wife
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.

“Is it asked, "who are those who shall obtain good in this world surrounded by the terror-producing sea ?" Those who touch not the shoulder of her who belongs to another”

கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றொல் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்

EthicsSelf-Control
Kural · 150
Ch 15 — Not coveting another"s Wife
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.

“Though a man perform no virtuous deeds and commit (every) vice, it will be well if he desire not the womanhood of her who is within the limit (of the house) of another”

ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது

EthicsSelf-Control
Kural · 151
Ch 16 — The Possession of Patience, Forbearance
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

“To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues”

தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்

Self-Control
Kural · 152
Ch 16 — The Possession of Patience, Forbearance
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.

“Bear with reproach even when you can retaliate; but to forget it will be still better than that”

வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.

Self-Control
Kural · 153
Ch 16 — The Possession of Patience, Forbearance
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.

“To neglect hospitality is poverty of poverty To bear with the ignorant is might of might”

வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.

Self-Control
Kural · 154
Ch 16 — The Possession of Patience, Forbearance
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும்.

“If you desire that greatness should never leave, you preserve in your conduct the exercise of patience”

நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.

Self-Control
Kural · 155
Ch 16 — The Possession of Patience, Forbearance
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.

“(The wise) will not at all esteem the resentful They will esteem the patient just as the gold which they lay up with care”

( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.

Self-Control
Kural · 156
Ch 16 — The Possession of Patience, Forbearance
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.

“Those who retaliate against harm enjoy satisfaction for a single day, but those who practice forbearance earn praise that lasts their entire lifetime and beyond.”

தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.

Self-Control
Kural · 157
Ch 16 — The Possession of Patience, Forbearance
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.

“Even when others wrong you unjustly, grieve for the harm they bring upon themselves through their actions, and remain steadfast in not abandoning your own ethical principles in response.”

தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.

Self-Control
Kural · 158
Ch 16 — The Possession of Patience, Forbearance
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.

“Let a man by patience overcome those who through pride commit excesses”

செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.

Self-Control
Kural · 159
Ch 16 — The Possession of Patience, Forbearance
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.

“Those who bear with the uncourteous speech of the insolent are as pure as the ascetics”

வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.

Self-Control
Thirukkural Wisdom

Ancient Tamil wisdom — made simple, practical and useful for the modern world, in your own language.

Disclaimer

This application provides educational explanations of the Thirukkural. English meanings and AI-assisted explanations are intended to make the text easier to understand. Classical texts can have multiple valid interpretations.

Thirukkural Wisdom for the World·Timeless Tamil couplets for global minds·© 2026
Choose your language
Tamil & English are always shown · pick a third language

Every Kural is presented in Tamil and English by default. If you'd like a third language alongside, choose one below. You can change or remove it anytime.

You can change this anytime from the globe button in the header.