All themes
Theme

Family

50 Kurals on Family.

Kural · 41
Ch 5 — Domestic Life
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

“A true householder is one who genuinely supports the three groups who depend on them — elders, family, and guests.”

இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.

FamilyEthics
Kural · 42
Ch 5 — Domestic Life
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.

“People who run a home should support those who have left household life and those in need. They should also help care for those who have died.”

துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.

FamilyEthics
Kural · 43
Ch 5 — Domestic Life
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

“A householder has five duties: honor ancestors, respect the wise, welcome guests, care for family, and take care of yourself. These five balance a good life.”

தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.

FamilyEthics
Kural · 44
Ch 5 — Domestic Life
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

“Earn money without doing wrong, and share what you have. This keeps family life on a good path for generations.”

பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.

FamilyEthics
Kural · 45
Ch 5 — Domestic Life
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

“When a home is built on love and doing what is right, that love and goodness become both the beauty of the home and its greatest reward.”

இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

FamilyEthics
Kural · 46
Ch 5 — Domestic Life
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்?

“If you live a good, honest family life with kindness and responsibility, you already gain everything that matters. There is no need to leave home and go somewhere else to find goodness.”

ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?

FamilyEthics
Kural · 47
Ch 5 — Domestic Life
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.

“A person who lives married life in the right way, following its natural duties and values, stands first among all people trying to live a good life.”

அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்.

FamilyEthics
Kural · 48
Ch 5 — Domestic Life
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.

“A family life that stays true to what is right and also helps others walk the same path is more valuable than a life spent alone in strict spiritual discipline.”

மற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும்அறம் தவறாத இல்வாழ்க்கை , தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்.

FamilyEthics
Kural · 49
Ch 5 — Domestic Life
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

“Family life, when lived with honor and care, is called true virtue. Even other ways of living are good if they bring no shame or harm to others.”

அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.

FamilyEthics
Kural · 50
Ch 5 — Domestic Life
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

“A person who lives a good family life, following what is right and caring for others, earns respect like the highest beings we honor.”

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.

FamilyEthics
Kural · 51
Ch 6 — The Worth of a Wife
மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

“A true life partner is one who embodies the virtues suited to home life and manages the household wisely according to the family's financial means.”

இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள்.

FamilyLove
Kural · 52
Ch 6 — The Worth of a Wife
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.

“A home life has no real value if the wife does not have the character and virtues needed to make a household thrive. No amount of wealth or status can replace this.”

இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.

FamilyLove
Kural · 53
Ch 6 — The Worth of a Wife
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?

“When a spouse has good character and kindness, a home has everything it needs. When a spouse lacks these qualities, the home has nothing, no matter how much money or comfort there is.”

மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?

FamilyLove
Kural · 54
Ch 6 — The Worth of a Wife
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

“When a wife brings unwavering loyalty and moral strength to the home, nothing in the world is more valuable than her presence.”

இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?

FamilyLove
Kural · 55
Ch 6 — The Worth of a Wife
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

“A wife who respects her husband deeply and serves him with devotion has the power to shape her household's well-being, just as rain nourishes the earth.”

வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்.

FamilyLove
Kural · 56
Ch 6 — The Worth of a Wife
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

“A true partner protects her own dignity, cares deeply for her spouse, and guards the good name of the family without ever giving up.”

கற்பு நெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன்கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.

FamilyLove
Kural · 57
Ch 6 — The Worth of a Wife
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

“Forcing rules on a woman from the outside does not protect her. Her own strength of character and self-respect are her true protection.”

மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது.

FamilyLove
Kural · 58
Ch 6 — The Worth of a Wife
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

“When a woman honors and supports her husband with care, she brings great respect and happiness to their shared life together.”

கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.

FamilyLove
Kural · 59
Ch 6 — The Worth of a Wife
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.

“A person whose partner does not care about living with honour and good character cannot walk confidently in front of others who criticize them.”

புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.

FamilyLove
Kural · 60
Ch 6 — The Worth of a Wife
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.

“A home's true happiness comes from the good character and care of both partners. The greatest treasure of that home is raising children who grow up kind and responsible.”

மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.

FamilyLove
Kural · 61
Ch 7 — The Wealth of Children
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.

“Of all the good things you can gain in life, there is nothing more valuable than having children who think clearly and use their minds well.”

பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.

Family
Kural · 62
Ch 7 — The Wealth of Children
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

“Parents who raise children with good character and no shame will be protected from suffering for many generations.”

பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.

Family
Kural · 63
Ch 7 — The Wealth of Children
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.

“Parents often say their children are their greatest treasure. Yet each child's future success comes from their own actions and effort, not just from being born into a family.”

தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.

Family
Kural · 64
Ch 7 — The Wealth of Children
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

“Food touched by your child's tiny hands tastes sweeter to you than anything else in the world, even the finest delicacy.”

தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.

Family
Kural · 65
Ch 7 — The Wealth of Children
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

“A parent finds physical joy in embracing their children, while hearing the tender, unpolished words of childhood brings a distinct delight to the ear.”

மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.

Family
Kural · 66
Ch 7 — The Wealth of Children
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

“People who say flute music or guitar music is the sweetest sound have never heard their own child learning to speak.”

தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.

Family
Kural · 67
Ch 7 — The Wealth of Children
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

“The best thing a father can do for his child is to help them shine with confidence and wisdom in any gathering of knowledgeable people.”

தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.

Family
Kural · 68
Ch 7 — The Wealth of Children
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

“When children grow wiser than their parents, it brings joy not only to the parents but to everyone in the world.”

தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.

Family
Kural · 69
Ch 7 — The Wealth of Children
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

“A mother feels greater joy when she hears others praise her child as a person of good character than she felt on the day she gave birth.”

தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.

Family
Kural · 70
Ch 7 — The Wealth of Children
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல்.

“The best gift a child can give their parent is to live so well that people say, 'What good fortune this parent had to raise such a fine person.'”

மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.

Family
Kural · 71
Ch 8 — The Possession of Love
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

“Love cannot be hidden or locked away. Even a small tear reveals the love inside our hearts.”

அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்

LoveFamilyCompassion
Kural · 72
Ch 8 — The Possession of Love
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

“People without love keep everything for themselves. People with love share everything they have, even their own bodies, with others.”

அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்

LoveFamilyCompassion
Kural · 73
Ch 8 — The Possession of Love
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.

“Love and action must be joined together, just as the soul and body are joined in a living person. When love guides what we do, that is when life becomes truly meaningful.”

அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.

LoveFamilyCompassion
Kural · 74
Ch 8 — The Possession of Love
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.

“Love makes us care deeply about others. That caring grows into friendship, a priceless gift that cannot be measured.”

அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்

LoveFamilyCompassion
Kural · 75
Ch 8 — The Possession of Love
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

“The joy and respect that happy people enjoy in this world come from living with a loving heart.”

உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர்

LoveFamilyCompassion
Kural · 76
Ch 8 — The Possession of Love
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

“People who do not understand deeply think love only supports goodness. But love also gives strength to fight against wrongs and protect others.”

அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது

LoveFamilyCompassion
Kural · 77
Ch 8 — The Possession of Love
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.

“If you know what is right but lack love, your own conscience will torment you. It is like harsh sunlight burning a soft, defenseless creature.”

எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.

LoveFamilyCompassion
Kural · 78
Ch 8 — The Possession of Love
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.

“A life lived without love in the heart is like a dead tree trying to grow leaves in a desert. It may look alive on the outside, but it cannot truly flourish.”

அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.

LoveFamilyCompassion
Kural · 79
Ch 8 — The Possession of Love
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

“If a person has no love inside, what is the use of having a healthy body outside? Love is the heart's true organ.”

உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்.

LoveFamilyCompassion
Kural · 80
Ch 8 — The Possession of Love
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

“A life lived in love is genuinely alive; without love, the body is merely bones wrapped in skin.”

அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்

LoveFamilyCompassion
Kural · 81
Ch 9 — Hospitality
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.

“The entire purpose of maintaining a household and accumulating resources is to enable the gracious welcome and care of guests who arrive at your door.”

வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்

FamilyCompassion
Kural · 82
Ch 9 — Hospitality
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண் டற்பாற் றன்று.

“Eating alone while guests wait outside is unworthy, even if the food you're consuming could grant immortality itself.”

விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று

FamilyCompassion
Kural · 83
Ch 9 — Hospitality
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.

“The life of one who warmly welcomes and cares for guests every day will never fall into ruin or poverty. Genuine hospitality, practiced consistently, sustains rather than depletes a household.”

தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.

FamilyCompassion
Kural · 84
Ch 9 — Hospitality
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.

“Prosperity takes up permanent residence in the home of those who welcome guests with genuine warmth and a smiling face.”

நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.

FamilyCompassion
Kural · 85
Ch 9 — Hospitality
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.

“Does a person who honors guests first and only then eats what remains even need to sow seeds in their fields? The implication is that such selfless hospitality brings its own natural abundance and prosperity.”

விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?

FamilyCompassion
Kural · 86
Ch 9 — Hospitality
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு.

“A person who warmly welcomes guests and eagerly waits for more visitors to arrive is truly noble. Such generosity makes them honored everywhere, even in the highest places.”

வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்

FamilyCompassion
Kural · 87
Ch 9 — Hospitality
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.

“The value of welcoming and caring for guests cannot be measured in fixed terms. The worth of your hospitality equals the quality and character of the guests you receive.”

விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்

FamilyCompassion
Kural · 88
Ch 9 — Hospitality
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.

“People who hoard wealth without sharing it with guests will one day lose everything and regret that they never used it for the true purpose of welcoming others.”

விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று இரங்குவர்

FamilyCompassion
Kural · 89
Ch 9 — Hospitality
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.

“A person who has money but refuses to welcome guests is truly poor. Only foolish people ignore hospitality.”

செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.

FamilyCompassion
Kural · 90
Ch 9 — Hospitality
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து.

“A guest's spirit wilts when the host greets them with a cold face, just as the delicate anicham flower fades the moment you smell it.”

அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்.

FamilyCompassion
Thirukkural Wisdom

Ancient Tamil wisdom — made simple, practical and useful for the modern world, in your own language.

Disclaimer

This application provides educational explanations of the Thirukkural. English meanings and AI-assisted explanations are intended to make the text easier to understand. Classical texts can have multiple valid interpretations.

Thirukkural Wisdom for the World·Timeless Tamil couplets for global minds·© 2026
Choose your language
Tamil & English are always shown · pick a third language

Every Kural is presented in Tamil and English by default. If you'd like a third language alongside, choose one below. You can change or remove it anytime.

You can change this anytime from the globe button in the header.