All themes
Theme

Leadership

50 Kurals on Leadership.

Kural · 381
Ch 39 — The Greatness of a King
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.

“A ruler who possesses all six essential elements—a strong army, wise people, wealth, capable ministers, reliable allies, and secure fortifications—stands as the strongest among all leaders.”

படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.

LeadershipGovernance
Kural · 382
Ch 39 — The Greatness of a King
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.

“A true leader's character rests on four pillars that must never waver: fearlessness in the face of challenge, generosity of spirit and resources, sharp wisdom in judgment, and relentless energy in pursuit of worthy goals.”

அஞ்சாமை, ஈகை , அறிவுடைமை, ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.

LeadershipGovernance
Kural · 383
Ch 39 — The Greatness of a King
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு.

“A country's ruler must act without delay, keep learning, and have courage. These three qualities should always guide how they lead.”

காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.

LeadershipGovernance
Kural · 384
Ch 39 — The Greatness of a King
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு.

“A true ruler is one who never deviates from righteousness, eliminates all that contradicts it, and governs with unfailing courage and dignified self-respect.”

ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.

LeadershipGovernance
Kural · 385
Ch 39 — The Greatness of a King
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

“A true ruler is one who knows how to create wealth, accumulate resources, protect what has been gathered, and distribute it wisely for the common good.”

பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.

LeadershipGovernance
Kural · 386
Ch 39 — The Greatness of a King
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்

“A land will be celebrated across the world when its ruler is approachable to all and speaks without harshness or cruelty.”

காண்பதற்கு எளியவனாய்க் கடுஞ்சொல் கூறாதவாய் இருந்தால் அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும்.

LeadershipGovernance
Kural · 387
Ch 39 — The Greatness of a King
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.

“A leader who speaks kindly, gives generously, and protects those who rely on them will find the entire world responding willingly to their vision and authority.”

இனியச் சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்க வல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும்.

LeadershipGovernance
Kural · 388
Ch 39 — The Greatness of a King
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.

“A ruler who governs justly and protects the people earns their reverence and is regarded as truly divine among them.”

நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக் கருதித் தனியே மதிக்கப்படுவான்.

LeadershipGovernance
Kural · 389
Ch 39 — The Greatness of a King
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.

“The world will gladly shelter under the rule of a leader who possesses the composure to endure harsh criticism and bitter words without retaliation.”

குறைகூறுவோறின் சொற்களைக் செவிகைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பும் உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்.

LeadershipGovernance
Kural · 390
Ch 39 — The Greatness of a King
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.

“A great ruler gives help, shows kindness, acts fairly, and protects people. These four qualities make the ruler an example for others.”

கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிமக்களைக்காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன்.

LeadershipGovernance
Kural · 431
Ch 44 — The Correction of Faults
செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.

“Success deserves respect when people avoid selfish pride, anger, and harmful desires.”

செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும்.

LeadershipEthics
Kural · 432
Ch 44 — The Correction of Faults
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.

“Refusing to share, placing yourself above others, and enjoying harmful acts are faults in a leader.”

பொருள் கொடாத தன்மையும் மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பனுக்கு குற்றங்களாகும்.

LeadershipEthics
Kural · 433
Ch 44 — The Correction of Faults
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.

“People who care about avoiding wrongdoing take even tiny faults seriously. They treat small faults as big ones and guard against them.”

பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்.

LeadershipEthics
Kural · 434
Ch 44 — The Correction of Faults
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை.

“Your own wrong actions can become an enemy that ruins your life. Make avoiding them a main goal in your life.”

குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.

LeadershipEthics
Kural · 435
Ch 44 — The Correction of Faults
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.

“If we do not guard against mistakes beforehand, our lives can quickly fall apart. The couplet compares this to dry straw burning near fire.”

குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.

LeadershipEthics
Kural · 436
Ch 44 — The Correction of Faults
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு?

“A leader should first find and correct their own faults. What fault remains when they do this before pointing out others’ faults?”

முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கி பிறகு பிறருடையக் குற்றத்தை ஆராயவல்லவனானால், தலைவனுக்கு என்ன குற்றமாகும்.

LeadershipEthics
Kural · 437
Ch 44 — The Correction of Faults
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.

“Wealth will go to waste if someone keeps it all instead of spending on necessary and good things.”

செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும்.

LeadershipEthics
Kural · 438
Ch 44 — The Correction of Faults
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.

“The tight-fisted refusal to give — the grasping attachment to wealth — is not just another character flaw to be counted among the rest. It stands alone as the worst fault of all.”

பொருளினிடத்தில் பற்றுக் கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை, குற்றம் எதனோடும் சேர்ந்து எண்ணத்தகாத ஒரு தனிக் குற்றமாகும்.

LeadershipEthics
Kural · 439
Ch 44 — The Correction of Faults
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.

“Never think too highly of yourself or praise yourself. Do not seek out actions that bring no good.”

எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது.

LeadershipEthics
Kural · 440
Ch 44 — The Correction of Faults
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.

“Enjoy what you like without revealing your wishes to people who might harm you. They cannot use those wishes to trick you if they remain unknown.”

தன் விருப்பம் பிறர்க்கு தெரியாதபடி விருப்பமான வற்றை நுகர வல்லவனானால், பகைவர் தன்னை வஞ்சிப்பதற்காகச் செய்யும் சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும்.

LeadershipEthics
Kural · 441
Ch 45 — Seeking the Aid of Great Men
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.

“Choose friends who understand what is right and have greater experience and sound judgment. Consider their character carefully, and learn how to build their friendship.”

அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.

FriendshipLeadership
Kural · 442
Ch 45 — Seeking the Aid of Great Men
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.

“Value people who help you solve problems and prevent future trouble. Keep them close and treat them with care.”

வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.

FriendshipLeadership
Kural · 443
Ch 45 — Seeking the Aid of Great Men
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.

“Among life's hardest and most valuable gains is a close bond with wise people. Such bonds grow when we value these people and treat them with care.”

பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.

FriendshipLeadership
Kural · 444
Ch 45 — Seeking the Aid of Great Men
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.

“The greatest strength is having wise, skilled people close to you. Choose people who know more than you, and learn from them.”

தம்மைவிட (அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச் சுற்றத்தராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.

FriendshipLeadership
Kural · 445
Ch 45 — Seeking the Aid of Great Men
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.

“Leaders depend on good advisers to see what they might miss. They should check people's character and skills before seeking their help.”

தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரைக் ஆராய்ந்து நட்புக்கொள்ள வேண்டும்.

FriendshipLeadership
Kural · 446
Ch 45 — Seeking the Aid of Great Men
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.

“Keep wise, capable people close, and act wisely yourself. This leaves those who wish you harm no opening.”

தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு,அவனுடைய பகைவர் செய்யக்கூடியத் தீங்கு ஒன்றும் இல்லை.

FriendshipLeadership
Kural · 447
Ch 45 — Seeking the Aid of Great Men
இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.

“Who possesses the power to bring down a leader who surrounds themselves with advisors bold enough to criticize and correct them when they err?”

கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.

FriendshipLeadership
Kural · 448
Ch 45 — Seeking the Aid of Great Men
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.

“A leader needs people who speak firmly about their mistakes. Without this help, they can fail even when nobody works against them.”

கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.

FriendshipLeadership
Kural · 449
Ch 45 — Seeking the Aid of Great Men
முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.

“A business needs money to start before it can earn. In the same way, people need dependable support to stay steady.”

முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.

FriendshipLeadership
Kural · 450
Ch 45 — Seeking the Aid of Great Men
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.

“Leaving good people's friendship behind brings ten times more harm than making many enemies.”

நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.

FriendshipLeadership
Kural · 461
Ch 47 — Acting after due Consideration
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.

“Before acting, carefully weigh what you will lose, what you will gain, and what ultimate benefit will flow from the effort over time.”

(ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.

Leadership
Kural · 462
Ch 47 — Acting after due Consideration
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்

“Even difficult goals are within reach when you discuss plans with trusted friends, think carefully yourself, and then act.”

ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும் எண்ணிப்பார்த்துச் செய்கின்றவர்க்கு அறிய பொருள் ஒன்றும் இல்லை.

Leadership
Kural · 463
Ch 47 — Acting after due Consideration
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.

“Wise people do not chase future profits through actions that could lose the money they already have.”

பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்.

Leadership
Kural · 464
Ch 47 — Acting after due Consideration
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்.

“People who want to avoid shame think carefully before acting. They do not start something without understanding its likely results.”

இழிவு தருவதாகியக் குற்றத்திற்கு அஞ்சுகின்றவர் (இன்ன ஊதியம் பயிக்கும் என்னும்) தெளிவு இல்லாத செயலைத் தொடங்கமாட்டார்.

Leadership
Kural · 465
Ch 47 — Acting after due Consideration
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.

“Acting against an opponent without careful planning can make them stronger. Think through your plans and what you can handle before starting.”

செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத்தொடங்குதல், பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும்.

Leadership
Kural · 466
Ch 47 — Acting after due Consideration
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.

“Doing what you should not do can cause harm. Leaving undone what you should do can also cause harm.”

ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.

Leadership
Kural · 467
Ch 47 — Acting after due Consideration
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

“Think about what to do and how before you start. Starting first and leaving the thinking until later is a mistake.”

(செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.

Leadership
Kural · 468
Ch 47 — Acting after due Consideration
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.

“Work done the wrong way will fail, even when many people help.”

தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.

Leadership
Kural · 469
Ch 47 — Acting after due Consideration
நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.

“Even trying to help can go wrong if you do not understand someone. Learn what each person is like, and help in ways that suit them.”

அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.

Leadership
Kural · 470
Ch 47 — Acting after due Consideration
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு.

“Think before you act, and choose actions that fit your role. People will not approve when your actions go against your responsibilities.”

தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.

Leadership
Kural · 471
Ch 48 — The Knowledge of Power
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.

“Before acting, consider how hard the task is and what you can do. Consider the strength of those against you and the help each side has.”

செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

Leadership
Kural · 472
Ch 48 — The Knowledge of Power
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.

“Know what you can do and what the task needs. With that knowledge and steady effort, you can achieve your goal.”

தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.

Leadership
Kural · 473
Ch 48 — The Knowledge of Power
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.

“Many people have started tasks without knowing their true strength and limits. They failed halfway because excitement pushed them forward, but ability did not.”

தன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.

Leadership
Kural · 474
Ch 48 — The Knowledge of Power
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.

“A person who ignores others, does not know their own limits, and praises themselves too much will fail quickly.”

மற்றவர்களோடு ஒத்து நடக்காமல், தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.

Leadership
Kural · 475
Ch 48 — The Knowledge of Power
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

“Even light peacock feathers can break a cart when piled too high. Small loads can cause damage when too many come together.”

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.

Leadership
Kural · 476
Ch 48 — The Knowledge of Power
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.

“If you push beyond your real limits, you risk losing everything. Like climbing a tree to the thinnest branch and then trying to go further — you will fall.”

ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலே ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்.

Leadership
Kural · 477
Ch 48 — The Knowledge of Power
ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.

“Give to others according to what you can truly afford. This is the smart way to keep your wealth safe and lasting.”

தக்க வழியில் பிறர்க்கு கொடுக்கும் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து விடும்.

Leadership
Kural · 478
Ch 48 — The Knowledge of Power
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.

“If your spending does not grow beyond your income, a small income will not harm you. Living within your means prevents ruin.”

பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.

Leadership
Kural · 479
Ch 48 — The Knowledge of Power
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.

“If you live without knowing what you actually have and what you can afford, your wealth will quietly disappear even while it looks like you still have plenty.”

பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டு விடும்.

Leadership
Kural · 480
Ch 48 — The Knowledge of Power
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.

“Generosity without checking what you can afford will quickly drain your resources and leave you empty.”

தனக்கு பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும்.

Leadership
Thirukkural Wisdom

Ancient Tamil wisdom — made simple, practical and useful for the modern world, in your own language.

Disclaimer

This application provides educational explanations of the Thirukkural. English meanings and AI-assisted explanations are intended to make the text easier to understand. Classical texts can have multiple valid interpretations.

Thirukkural Wisdom for the World·Timeless Tamil couplets for global minds·© 2026
Choose your language
Tamil & English are always shown · pick a third language

Every Kural is presented in Tamil and English by default. If you'd like a third language alongside, choose one below. You can change or remove it anytime.

You can change this anytime from the globe button in the header.